districts

img

நீதிபதியான கூலித் தொழிலாளியின் மகன்

மயிலாடுதுறை, பிப்.20-  மயிலாடுதுறை மாவட்  டம், தரங்கம்பாடி வட்டம்  சங்கரன்பந்தல் அருகே யுள்ள முனிவலங்குடி கிரா மத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் மகன் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.  முனிவலங்குடி பிள்ளை யார் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணியன். இவரது மனைவி அஞ்சம்மாள். இரு வரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது மகன்  பாலதண்டாயுதம் சிறு வயது  முதலே கூலி வேலைக்குச் சென்று கொண்டு, தனது  பள்ளி படிப்பை சங்கரன்பந் தல் அரசு மேல்நிலைப் பள் ளியில் 12 ஆம் வகுப்பு வரை முடித்தார்.

மேலும் ஏழ்மை நிலை காரணமாக, படிக்க வசதி யின்றி ஏழு ஆண்டுகள் படிக்க  முடியாமல் தனது சகோதரர் தண்டபாணியுடன் கொத்த னார் வேலைக்கு சென்று வந்துள்ளார். அந்நேரத்தில் தான், மயிலாடுதுறை நீதி மன்றத்தில் வழக்கறிஞர் எழுத்தராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.  பின்னர் பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி தாவரவியல் இளங்கலை படிப்பை முடித்து, திருச்சி அம்பேத்கர் சட்டப் பல்க லைக்கழகத்தின் அரசு சட்டக்  கல்லூரியில் மூன்று ஆண்டு கள் சட்டப் படிப்பு முடித்துள்  ளார்.

மேலும், வழக்கறிஞ ராக பதிவு செய்து மயிலாடு துறை மற்றும் செம்பனார் கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி னார்.  இந்நிலையில் இவரது பெற்றோர் இறந்துவிட, திரு மணம் முடித்து சொந்த ஊரி லேயே வசித்து வந்தவர், நீதி பதியாக வேண்டும் என்ற  எண்ணத்தில், கடும் போராட் டத்திற்கு பிறகு தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வா ணையத் தேர்வை எழுதி னார். தற்போது இத்தேர்வி லும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று தனது 36  ஆவது வயதில் உரிமையி யல் நீதிபதியாக தேர்வாகி உள்ளார்.  

நீதிபதியாக தேர்வாகி யுள்ள பாலதண்டாயுதத் திற்கு மயிலாடுதுறை வழக்க றிஞர் அலுவலகத்தில் மாலை  அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினர். ஏழ்மை நிலையிலும் விடா முயற்சி யால் நீதிபதியான பால தண்டாயுதத்தின் வீடு தேடிச்  சென்று, அவருக்கு பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  மேலும் 2015-க்கு பிறகு  மயிலாடுதுறை மாவட்டத்  தில், இந்த இளைஞர் நீதிபதி யாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.